காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. நேற்று நடந்த மகளிர் பளு தூக்கும் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த சானு சைக்கோம் மீராபாய் முதல் தங்கத்தை பெற்றுத் தந்தார். ஆண்களுக்கான 56 கிலோ பளுதூக்கும் போட்டியில், குருராஜா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இரண்டாவது நாளான இன்று, 53 கிலோ மகளிர் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சனு ((Sanjita Chanu)) முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதன்மூலம் பதக்கப்பட்டியலில், 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *