தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காதென பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஆதரவுக்கரம் நீட்டாது என்று குறிப்பிட்டார்.
பட்டாசு ஆலைகள் குறித்த கேள்விக்கு, பட்டாசுத் தொழிலையும், பட்டாசுத் தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என முதலமைச்சர் உறுதியளித்திருப்பதை ராஜேந்திர பாலாஜி சுட்டிக்காட்டினார்.