ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசுபடுவதுடன் பல்வேறு கொடிய நோய்களுக்கும் ஆளாவதாக கூறி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீரில் நஞ்சு கலந்து உயிருக்கு உலை வைக்கும் அளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளனர். இன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், வாயில் முன்பு அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *