காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பாத்திமா என்ற பெண், தமது 10 வயது மகள் யாசின் மற்றும் உறவினர்களுடன் திண்டுக்கல்லுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
மதுராந்தகம் அடுத்துள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென டயர் வெடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த 10 வயது சிறுமி யாசின் சம்பவ இடத்திலும், அவரது உறவினரான மீரான் என்பவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். பாத்திமா உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.