பன்றிக் காய்ச்சல் பரவும் காலங்களில், தற்காத்துக் கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளை தற்போது பார்க்கலாம்.
பன்றிக்காய்ச்சல் என பொதுமக்கள் மத்தியில் குறிப்பிடப்படும் ஏ(ஹெச்1என்1), ஃபுளூ காய்ச்சல், இன்ஃபுளூயென்சா வைரசால் ஏற்படுகிறது. ஒன்று முதல் 3 கட்டங்களில், பெருமளவில் விலங்குகள் மத்தியிலும், பின்னர் ஒரு சில மனிதர்களுக்கும், அதைத் தொடர்ந்து மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும் காய்ச்சல் இது. முதலில் மெக்சிக்கோவில் இருந்து பரவியது. பன்றிக் காய்ச்சல் குறிப்பிட்ட பருவங்களில் ஏற்படும் நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபுளூ வைரஸ் உள்ள எதையேனும் தொட்டு, முகம் வாயை தொடும்போது இந்த வைரஸ் தொற்றி விடுகிறது. ஃபுளூ காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ தும்மினாலோ தெறிக்கும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. தொடர்ச்சியாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, சோம்பல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளாகும்.