சந்திராயன்-2 திட்டத்தை வரும் ஜனவரியில் செயல்படுத்த திட்டம் – ISRO சிவன்

சந்திராயன்-2 திட்டத்தை வரும் ஜனவரியில் செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த புதன்கிழமை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதேபோல அடுத்தடுத்து விண்வெளித் திட்டங்கள் உள்ளன எனக் கூறிய சிவன், டிசம்பர் 4ஆம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *