குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முதியவர் அடித்து கொலை – ஒருவர் கைது

பாரதி நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தி என்பவர் தனது மருமகன் பாலாஜியுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்த போது மூர்த்தியை பாலாஜி கீழே தள்ளி உள்ளார். இதில் மூர்த்தி நிலை தடுமாறி அருகில் இருந்த சுவற்றில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாலாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *