கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.சென்னையில் தொழில் செய்து வருகிறார்.அவரது நண்பர் மூலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் அறிமுகம் ஆனார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் நிலம் விறபனைக்கு வருவதாக சூரியநாராயணன் விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.அவருடன் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் வந்த விஜயகுமார் இடத்தை பார்வையிட்டு தான் வாங்கி கொள்வதாக கூறியுள்ளார்.ஆனால் வேறொருவருடைய நிலத்தை அவரிடம் காட்டிய சூரியநாராயணன் அந்த நிலத்திற்கு போலியான ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரிடம் காட்டி 99 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார்.பின்னர் போலியான ஆவனங்கள் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயகுமார் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிர்டம் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சூரியநாராயணனை காமநாயக்கன் பாளயம் காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.அதனை தொடர்ந்து பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.இந்த ஒரு மோசடியில் தான் ஈடுபட்டாரா எனவும் தமிழகம் மற்றும் கேரளாவில் வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளாரா எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2018-03-22