நாகையில் 519 இடங்களில் சமையல் செய்து உணவு அளிக்கப்படுகிறது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்படைந்தவர்களுக்காக 519 இடங்களில் சமையல் செய்து உணவு அளிக்கப்படுவதாகவும், மாவட்டத்தில் எங்காவது உணவு தட்டுபாடு ஏற்பட்டால் வாகனங்களின் கொண்டு சென்று உணவு வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகையில் 24 மணி நேரமும் செயல்படும் அரசின் சமுதாய சமையல் கூடங்கள் திறந்து வைத்து உணவு உண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பற்றாக்குறை ஏற்படுவதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *