தொடர்ந்து 5-வது நாளாக இரவு பகலாக காவல் பணியில் இருந்த ஆய்வாளர் திடீரென உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து 5-வது நாளாக இரவு பகலாக பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறும் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பாதுகாப்பு பணியில் ஆய்வாளர் சுப்பையா ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து இரவு பகலாக 5-வது நாளாக காவல் பணியில் ஈடுபட்டிருந்த சுப்பையாவுக்கு இன்று அதிகாலை வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *