திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் தொடர்மழை காரணமாக செடிகளில் திரட்சை பழங்கள் அழுகியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைரோடு திராட்சைக்கு புகழ் பெற்றது. இப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் திராட்சை செடிகளை பயிரிட்டு பராமரித்து வந்தனர். காய்கள் காய்த்து பழுத்து அறுவடைக்கு தயராக இருந்த நிலையில், கடந்த வாரம் கஜாபுயல் தாக்கியது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அடிக்கடிப் பெய்து வரும் மழையால் திராட்டை தோட்டத்தில் மழைநீர் நிற்பதாலும், திராட்சை கொத்துகளில் தண்ணீர் பட்டதாலும் கொத்தழுகள் நோய் , வெடிப்பு நோய் போன்றவை தாக்கியுள்ளன. இதனால் அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலையில், திராட்சைப் பழங்கள் பந்தலிலேயே அழுகி உதிர்கின்றன. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.