சேலத்தில் செல்போன் டவர் பேட்டரிகளைத் திருடியவர்கள் கைது

சேலத்தில் செல்போன் கோபுரங்களில் தொடர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டுவந்த மூன்றுபேரை போலிசார் கைதுசெய்தனர். எருமாபாளையத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட BSNL க்குச் சொந்தமான செல்போன் டவரிலிருந்து 72 பேட்டரிகளும், Vodafone க்குச் சொந்தமான டவரிலிருந்து 48 பேட்டரிகளும் திருடுபோனது. மேலும் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் அருகே உள்ள Indus நிறுவனத்துக்குச் சொந்தமான டவரிலும் 24 பேட்டரிகள் திருடுபோயின.

இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த, மூன்றுபேரை போலிசார் கைதுசெய்தனர். 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகளை சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடியதும், அவற்றை கோவை மற்றும் பெங்களூரிவிலிருந்து வரும் ஏஜெண்டுகளிடம் விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *