கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் தாமதமாக வருவதாகப் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். மடத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக லட்சுமி என்பவரும், ஆசிரியராக கோமதி என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளியில் இரு ஆசிரியர்களும் தினமும் காலதாமதமாக வருவதாகவும், இதனால் மாணவர்களே பள்ளியை திறந்து, இறைவணக்கக் கூட்டம் நடத்தி, வகுப்பறைக்குள் சென்று தாங்களாகவே படித்து வருவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *