கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் கடலில் அத்துமீறி நுழைந்த 8 பேர் கைது

இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பாக ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாகை மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், படகில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். நாகை துறைமுகத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியின்போது, சந்தேகத்திற்கு இடமாக கடலில் அதிக நபர்களுடன் படகில் இருந்த 8 நபர்களை விசாரித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  டம்மி வெடி குண்டும் கைபற்றப்பட்டது. நாகை துறைமுகத்தில் கொண்டுவரப்பட்ட அவர்களை நாகை மாவட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) பத்ரிநாராயணன் விசாரணை நடத்தி கடற்கரை காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நாகை துறைமுக பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை பயிற்சியானது இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *