ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள சாய்பாபா ஆலய மண்டபத்தில் நியூ எங் சோட்டோகான் கராத்தே டோ பவுண்டேசன் அமைப்பின் சார்பில் 11வது மாநில அளவிலான கராத்தே போட்டி மாஸ்டர் ராஜா சங்கீதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டதிலிருந்து சுமார் 500கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளர் அசோக் ஜி லோதா,நடிகர் பயில்வான் ரங்கநாதன்,ஜாகுவர் தங்கம் , பாபா ரமேஷ் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2018-03-22