அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயலாலும், வங்கக் கடலில் உருவாக உள்ள புயலாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் மாறிவிட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புயல் சின்னங்கள் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக மழை குறையும் என தெரிவித்தார்.