துருக்கியில் நின்று கொண்டிருந்த எஞ்சின் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: 9 பேர் உயிரிழப்பு, 47பேர் காயம்

துருக்கியில் விரைவு ரயில் ஒன்று மற்றொரு ரயில் எஞ்சினுடன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.

துருக்கித் தலைநகர் அங்காரா அருகே மார்சாண்டிஸ் என்னும் ரயில்நிலையத்தில் அதிவிரைவாக வந்த விரைவு ரயில், நின்றுகொண்டிருந்த ரயில் எஞ்சின் மீது மோதியது. இதையடுத்து நிலையத்தின் நடைமேடை, நடைமேம்பாலம் ஆகியவற்றின் மீதும் மோதியது.

 

இதில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்ததுடன், நடைமேம்பாலமும் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.

மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பனிமூட்டத்தால் பார்வை புலப்பாடு குறைந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *