ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், தீபாவளி காலகட்டத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்த அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். இந்த தடைகள், தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக, நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தடைகளால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு சிறிது சிறிதாக குறைத்து வந்தாலும், விலையின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வது, உள்நாட்டில் மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *