இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக பிரேசிலின் புதிய அதிபர் ஜைர் போல்சோனாரோ அறிவிப்பு

பிரேசில் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜைர் போல்சோனாரோ, இஸ்ரேலில் உள்ள தங்கள் தூதரகம் டெல் அவிப் நகரில் இருந்து ஜெருசலேம் நருக்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளார். ஜெருசலேம் நகரை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடி வருவதால் இஸ்ரேல் நாட்டுக்கான வெளிநாட்டுத் தூதரகங்கள் டெல் அவிவ் நகரிலேயே உள்ளன.

ஜெருசலேமைத் தங்கள் தலைநகராக இஸ்ரேல் அறிவித்ததை முதன்முறையாக அமெரிக்கா அங்கீகரித்ததுஇந்நிலையில் பிரேசில் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜைர் போல்சோனாரோ, தங்கள் நாட்டுத் தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *