இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 7ல் கூட்ட அதிபர் சிறிசேனா ஒப்புதல்

இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 7-ஆம் தேதி கூட்ட அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டிருப்பதாக சபாநாயகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

அத்பர் சிறிசேனா ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவீட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்ததை அடுத்து அங்கு அரசியல் சிக்கல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விக்கிரமசிங்கே மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் சிறிசேனாவுடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜெயசூர்யா, வரும்7-ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *