காஷ்மீரில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஜம்மு – சிறீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதுடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திலும் கடுமையாகப் பனிபொழிவதால் ஜம்மு – சிறீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றிவந்த லாரிகள் உதம்பூரில் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவால் தரைமுழுவதும் பனிமூடிக்கிடக்கிறது. மரங்களின் மீதும் பனி உறைந்துள்ளதால் இலைகள் பசுமை மறைந்து வெண்ணிறமாகக் காட்சியளிக்கின்றன.