வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதுடன் பனிப்பொழிவு அதிகரிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஜம்மு – சிறீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

வடமாநிலங்களில் கடுங்குளிர் நிலவுவதுடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திலும் கடுமையாகப் பனிபொழிவதால் ஜம்மு – சிறீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இதனால் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றிவந்த லாரிகள் உதம்பூரில் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்திலும் கடும் பனிப்பொழிவால் தரைமுழுவதும் பனிமூடிக்கிடக்கிறது. மரங்களின் மீதும் பனி உறைந்துள்ளதால் இலைகள் பசுமை மறைந்து வெண்ணிறமாகக் காட்சியளிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *