திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவு

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கபட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைதேர்தலை நடத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இடைத்தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை செயலர் பரிந்துரைத்திருப்பது ஏற்கக் கூடிய காரணம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இடைத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தமிழக அரசு தேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தலுக்கான கால அட்டவணை எதுவும் இருப்பின் அதனையும் பதில் மனுவாக தாக்கல் செய்ய  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *