இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து காணப்படுகிறது. சிம்லா, குல்லு, சாம்பா, கங்ரா, கினாவூர் ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
எனவே, இப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்கள் விழிபுணர்வுடன் இருக்குமாறும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்டால், உடனடியாக அகற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.