அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணம்: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களுடன் நம்மவர் என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் மக்கள் முன் பேசுகையில், அதிமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றும் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயார் நிலையில் இப்பதாகவுவம் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், யார் பலமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் ரஜினியை ஜெயக்குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்காதது குறித்த அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு யாருக்கு எந்த பொறுப்பை வழங்குவது என்பது முதலமைச்சரின் முடிவுக்கு உட்பட்டது என்று ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *