அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆஃப்கன் வந்துள்ள நிலையில் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகே 6 ராக்கெட்கள் வரை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆஃப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நேற்று ஆஃப்கன் தலைநகர் காபூல் வந்திறங்கினார். அவர் வந்திறங்கிய விமான நிலையத்துக்கு அருகிலே 6 ராக்கெட்டுகள் வரை வீசப்பட்டு சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்ட போதிலும், விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *