ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனின் 2-வது மகன் ஷகீல் யூசூப் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகல் ரம்பாக் பகுதியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையும், உள்ளூர் போலீசாரும் நடத்திய தேடுதல் வேட்டையில் அவன் பிடிபட்டான். 2011 ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்யும்வகையில் பணப்பரிமாற்றம் மேற்கொண்ட வழக்கில்,
ஷகீல் யூசூப்( Shakeel Yousuf ) கைது செய்யப் பட்டுள்ளான்.
இந்த வழக்கு குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவு அனுப்பிய சம்மன்களுக்கு முறையாக ஆஜராகாததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஷகீல், ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளான். சையத் சலாஹூதீனின் சையத் சாகித் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.