விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு…….

விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஒலமிடும் ஆற்று மணல் என்ற நூல் அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணல் விற்பனையில் முறைகேடு இல்லை என்று முதலமைச்சர் சொல்வது தவறு என்றும் மணல் விற்பனை செய்வதில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்றும் கூறினார். இது வரை விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் 95 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மணல் தமிழகத்தை தாண்டி அதிகவிலைக்கு அண்டை மாநிலங்களுக்கு விற்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்நிலையில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரி, தாசில்தார், மாணவன் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எனவும் நல்லக்கண்னு குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசு மணல் வழக்கில் மேல்முறையீடு குறித்த கேள்விக்கு மேல் முறையீடு செய்தது தவறு என்று அவர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *