வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த ஆண்டை போல் கனமழை பெய்தால், வடசென்னை பகுதிகள் நீரில் மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *