மெக்சிகோவின் துராங்கோ விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோ நகரை நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் வயலில் விழுந்து நொறுங்கியது.
இதில் அந்த விமானத்தில் பயணித்த 101 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். 97 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்களுடன் சென்ற இந்த விமானம் திடீரென விமான நிலையத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள வெட்டவயல் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது அந்தவிமானம் தரையில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து காயமடைந்த பயணிகளை மீட்டனர். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.