முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு….. கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும் என தகவல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விவசாயத்துக்காக, இன்று முதல் அடுத்த 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக குடிநீர் தேவைக்காக ஏற்கனவே ஆயிரத்து 400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயத்துக்காக இன்று முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வீதம், 120 நாட்களுக்கு தண்ணீர் அணையிலிருந்து திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *