முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் 99-வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தவுள்ளார்.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், அமைச்சராக பதவி வகித்தவர் ராமசாமி படையாச்சியார். தமிழகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகளை மதிக்கும் வகையில் சென்னை கிண்டியில் அவரது முழு உருவ சிலை கடந்த திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது. ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, ஆண்டுதோறும் அரசு சார்பிலும், அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ராமசாமி படையாச்சியாரின் 99-வது பிறந்த நாளையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இன்று காலை 8.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இந்நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.