மதங்களின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் ; குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை

மதங்களின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என்றும் மதத்தின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார். தோட்டாக்கள் தற்காலிகமாகவே மாற்றத்தை தரும் என்றும் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது என்று கூறிய வெங்கய்ய நாயுடு, தோட்டக்களை விட வாக்கு சீட்டுகளே வலிமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், ஆயுதப்போரட்டத்திற்கு பின் அரசியலில் ஈடுபட்டு இலக்கை அடைய முயற்சிப்போரை ஆதரிக்க கூடாது என வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *