இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் போர் முடிந்திருந்தாலும், படுகொலைகள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் செல்லுதல் நிறைவுக்கு வரவில்லை என கூறினார்.
சிலர் இன மோதல்கள் உருவாகும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையும், அச்ச சூழ்நிலையும் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் போருக்கு பின்னர் பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், போர் முடிவுற்ற நிலையிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாகவில்லை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.