பொதுமக்களின் குறைகளைத் விரைவாக தீர்க்க நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும்; பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்….

மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான பிரகதி ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

23 ஆவது முறையாக டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உத்தரகாண்ட், ஒடிசா, மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, நாகலாந்து, அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 வகையான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், அதனைத் துரிதப்படுத்த நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *