பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இரவோடு இரவாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுக சார்பில் வரும் 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் திமுக மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக பங்கேற்று, இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.