புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவியேற்பு… தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியனம்;

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைமை ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். இவர் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில்,அதே தினத்தில் தற்போது ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஓம் பிரகாஷ் ராவத் கடந்த 2015ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையராக உள்ளார். இவரது தேர்தல் ஆணையர் பொறுப்பில் அசோக் லவாசா என்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *