நீட் தேர்வு மைய்யங்களை மாணவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

நீட் தேர்வு மைய்யங்களை மாணவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். அதிகப்படியான மாணவர்கள் பதிவிட்டதால் இங்குள்ள மைய்யங்கள் நிறைந்து விட்டதால் வேறு இடங்கள் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் தவறு தான். தேர்வு மைய்யங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

இந்த முறை கால அவகாசம் குறைவாக இருப்பதால். வெளிமாநிலங்களுக்கு நீட் எழுதச் செல்லும் மாணவர்களின் பயணச்செலவை தமிழகஅரசு ஏற்றுக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய காலக்கட்டத்தில் பணபலம் இல்லாத மன பலத்தோடு தேர்வைச் சந்திக்கத் தயாராகியிருக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் உதவி பக்கபலமாக இருக்கும்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *