நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்திற்கு பெரும் ஆபத்து உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் தேவாரத்தை அடுத்த பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை கண்டித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ ஆய்வகத்தால், தேனி மாவட்டத்திற்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்திற்குட்பட்ட அணைகளுக்கும் ஆபத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினர்.

முன்னதாக, வைகோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *