இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 5ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. மேலும் ஜனவரி மாதம் 28ஆம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இதுபோன்ற தொடர்கள் இளைஞர்களுக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவும் நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். மேலும் தாங்கள் நூறு சதவீதம் நாட்டிற்காக மட்டுமே கிரிக்கெட் விளையாட செல்வதாகவும் அவர் கூறினார்.
2017-12-28