தமிழிசை குழந்தையாக இருப்பதில் தவறில்லை என்றும் குழப்பவாதியாகத்தான் இருக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழிசை குழந்தையாகவே இருப்பதாக துரைமுருகன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
கிளி ஜோசியமே பலிக்காமல் இருக்கும் போது திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கிளி ஜோசியத்தை படித்து விட்டு தமிழக அரசு கலைந்து விடும் என ஆருடம் தெரிவிக்கிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.