தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ONGC மற்றும் வேதாந்தா நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.

இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், டெல்லியில் இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *