ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி ராணுவ வீரர் மூர்த்தி பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் மூர்த்தியின் உடலுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான கரூர் மாவட்டம் நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே ராணுவ வீரர் மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.