சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை; நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் பேட்டி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட சின்னம் முக்கியமில்லை என்றும், சின்னம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற காலம் இதுவல்ல என்றும் கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் தங்கள் அணி வெற்றி பெறும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *