ஷாங்காய் நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. இந்நிலையில் தற்போது நகரும் இந்த பனிமூட்டம் காரணமாக பொலிவிழந்து உள்ளது. நகரின் சில பகுதிகளில் 100 மீட்டருக்குள் இருப்பவர்களை கூட பார்க்க முடியாத அளவிற்கு பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்து செல்கின்றன. பனிமூட்டத்தின் காரணமாக ஷாங்காய் நகரில் விமான போக்குவரத்தும் பாதிப்பை சந்தித்தன. விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படகு சவாரியும் அடியோடி நின்று போனது. இதையடுத்து சீனாவில் ஷாங்காய் நகரத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஷாங்காய் நகரும் முழுவதும் முடங்கியுள்ளது.
2018-01-17