கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு; வேலைநிறுத்தம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை சட்டப்படி சந்திப்போம் என்றும் பேட்டி…

கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்து தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 17 தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்கத்தினர், வேலைநிறுத்தம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *