நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய். பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் முதன்மையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 8 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். மேலும் 350-க்கும் மேற்பட்ட விசைபடகுகளும், 3000 பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2017-12-19