கடல்சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மூவாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய். பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் முதன்மையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 8 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். மேலும் 350-க்கும் மேற்பட்ட விசைபடகுகளும், 3000 பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *