ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் 3பேரின் உடல்களை கேரளா அரசிடம் இருந்து பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துகுடி மாவட்டம் மீனவர் காலனியை சேர்ந்த ஜோசப், ரவீந்திரன், ஜெகன், ஜீடு, பாரத், கினிஸ்டன் ஆகியோர் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாக ஏற்பட்ட கடல்சீற்றத்தில் அவர்கள் சென்ற படகு கடலில் மூழிகியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெகன் உள்ளிட்ட மூவரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே கேரளா கடற்கரையோரம் 18க்கும் மேற்பட்ட உடல்கள் கரை ஒதுங்கின. அதில் தூத்துகுடி மீனவர்களான ஜோசப், ஜீடு, ரவி ஆகிய மூவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் இவர்களின் உடலை கேரளா அரசு கொடுக்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து உடல்களை பெற்று தர தமிழக மீன்வளத்துறையினர் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துக்கொண்ட பெண்கள் உட்பட ஏராளமான மீனவர்கள் சாலையில் கற்கள் மற்றும் மரங்களை போட்டு மறியல் நடத்தினர். இதனால் அப்பகுயில் சில மணி நெரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *