இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் 61 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *