இராமநாதபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை

இராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முக பிரியா, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சண்முகப் பிரியா வீட்டின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சண்முகப் பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி களவாடப்படாதது, வீட்டில் துணி காயப்போடும் கயிறு கழுத்தில் சுற்றப்பட்டிருந்தது, கொடூரமான முறையில் மனைவி வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்பட்டும் கணவர் மோகன் ராஜ் எந்த சலனமும் இல்லாமல்  இருந்தது ஆகியவற்றால் சந்தேகமடைந்த போலீசார், மோகன் ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *