இந்தோனேசியா நாட்டின் சுதிர்மன் மாவட்டத்தில் அந்நாட்டின் பங்கு வர்த்தகச் சந்தை அலுவலகம் இயங்கி வருகிறது. ஆயிரத்து 995ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல் தளம் இடிந்து கீழ்தளத்தில் உள்ள வரவேற்பரை பகுதியின் மீது விழுந்தது. கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு கம்பிகள் சிமெண்ட் கான்கிரீட்டுடன் பெயர்ந்து கீழே விழுந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியர்வர்களை மீட்டனர். இந்த விபத்தில் 75 பேர் காயமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு இதே கட்டிட வளாகத்தில் நிகழ்ந்த கார்குண்டு தாக்குதலில் பத்து பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018-01-16